Followers

Tuesday, July 29, 2008

விலை மாது

பலர் காமப்பசி தீர்த்து
தன் பசி போக்கியவள்

ஒருநாளில் பல முதலிரவு
இவள் மனம் ஏங்கும்
எப்போது என் கடை இரவு

பகலில் சூரிய மஞ்சள்
இரவில் மேக மல்லிகை சூடி
உலா வரும் பெண் நிலா

பலருக்கு பரிசோதனைகூடம்
சிலருக்கு சவக்கிடங்கு

தன் கணவர்களிடம்
ஜாதி,மதம்
பார்த்திடாத சமத்துவ நாயகி.......!!





1 comment:

Paul said...

நான் ரொம்ப நாட்களாக விலைமாது என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுத வேண்டும் என்று நினைத்துக்கு கொண்டிருக்கிறேன்... எனகென்னவோ இந்த கவிதையில் இன்னும் நிறைய சொல்லப்பட வேண்டும் என்று தோன்றுகிறது...

என்னவென்று தெரியவில்லை, ஆனால் எதோ ஒன்று குறைகிறது அந்த கவிதையில்...