- அரை உடல் தெரியும் மகள் அணிந்த ஆடை ,ரசித்தபடி சிரிக்கிறாள் ,அடையாளம் தொலைத்ததன்விளைவு தெரியா தலைவிரி கோல தமிழ்த்தாய்.காதில் சிறு வளையம், கேசம் இறுக்கிபின்னலிட்ட யுவன் ஒருவன்சலவை மறந்த கால்சட்டையோடு .நடக்கிறான் நளினம் காட்டி .எத்திசையும் மக்கள் மாநாடு , சிலர்காதுக்குள் முனகும் இசையோடு மட்டும் பேசியபடி .அவசரம் பொது மொழியாய்வேகம் கட்டாய சட்டமாய்இடம் பெயர்வு எப்போதும் எல்லாருக்குமான ஒன்றாய்.அகால விபத்து நடந்தாலும் அலுவலக தாமதகவலையுடன் சாலை நெரிசலில் மனிதர்கள் .வீதிகளின் குறுக்கு விளையாட்டில்முகவரி தொலைத்து நிற்கும் வீடுகள்.கடல் கலக்கும் குட்டி ஆறு ,இரு கைகளில் குடிசை தாங்கி ஊர் சுற்றும் .மாதம் பன்னிரண்டும் முட்டிய வயிறுடன்மாநகர பேருந்துகன்னிதமிழ் , ஆடை களைந்துவன்புணர்ச்சி செய்யபடுகிறாள்வாசிகளின் நாவில் ..மரண நிகழ்விலும் , அழுகையை அமுக்கி வைக்கும்திறனில் கைதேர்ந்தோறாய்அடுக்கு வீடுகளில் குடியிருப்போர் .கடற்கரையில் காமம்மணலாய் பரந்து கிடக்க ..காதல்முத்தாய் .. ஒளிந்திருக்கும் கடலுக்குள்களவியின் முன் விளையாட்டுடன்படகின் பின்புறமும்ஆளில்லா ரயில் நிலைய இருக்கையிலும்ஜோடிகள் தம் காதல் சாரம் நிரூபிக்க இடம் பிடிக்கிறார்கள்வீதி நாய்களிடம் சண்டையிட்டு ..மஞ்சள் வாகனங்களில்அரக்கு நிற சட்டையுடன் வீதி உலா வருகிறார்பகல் கொள்ளையர் சிலர்.அடைமழை ஆட்டம் , குளிர் அறையில் உலர்த்தல்தள்ளாடிய படியே கடக்கின்றன சனிக்கிழமை இரவுகள் .ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் ,அரங்குகளுக்குள் ..கையேந்தியபடி ஒரு கூட்டம் வாயில் காத்தபடி ..சூரியனுக்கு முன் கண்விழித்த தமிழன்டாஸ்மார்க்கில் தவமிருக்ககூட்டம் கூட்டமாய் வந்திறங்குவார்பனிரெண்டு மணி நேரமும் சளைக்காமல்உழைக்கும் வடவர் பலர் ...உலகின் தலை சிறந்த மகிழ்வுந்து பயணிக்கும் சாலையில்வீடில்லா மனிதன் உறக்கம் ..
அன்றாடம் காட்சிகள் இவையாகநரகமென நகர்கிறது பெரு நகர் வாழ்க்கை
Followers
Friday, May 4, 2012
பெரு நகரின் பதிவுகள்
Subscribe to:
Posts (Atom)