வீதியை கடந்திடும்
ஒவ்வொரு முறையும்...
முற்றத்து வீட்டின்
கொடியில் காய்ந்திடும்
குழந்தையின் துணிகள்
என் மலட்டு கர்ப்பம் தட்டி
உயிர் கொன்று செல்லும்
அவஸ்தையை யாரிடம்
போய் சொல்ல ........
Followers
Saturday, November 22, 2008
Wednesday, November 19, 2008
கேளீர்......
தாய் பேருந்தின்
ஜன்னல் ஓரம்,
மடி அமர்ந்த குழந்தை
சிரித்துக்கொண்டே கையசைத்ததது
சாலையில் போகிற
எல்லோரையும் பார்த்து ..
பாரபட்சமின்றி .......!!!!!
ஜன்னல் ஓரம்,
மடி அமர்ந்த குழந்தை
சிரித்துக்கொண்டே கையசைத்ததது
சாலையில் போகிற
எல்லோரையும் பார்த்து ..
பாரபட்சமின்றி .......!!!!!
Tuesday, November 4, 2008
அடி வாழை,,,,,,
நாணம் தவிர்,
கொஞ்சி பேசு,
ஆடை குறை,
நெளிவுடன் நட,
பார்வையில் இழு,
பேச்சில் உருக்கு ,
பணம் நினை ,
கற்பை துற,
உன் சுய கனவுகள் மற.......
அம்மாவின் அறிவுரை இது !!!!!!!!
நடிகையின் மகளாய் நான் ....
Subscribe to:
Posts (Atom)