Followers

Friday, April 27, 2012

அழையா விருந்தாளிகள்

அம்மாவும் அப்பாவும் நன்றாகத்தான்
இருக்கிறார்கள் சண்டையில்லாமல்,
குடித்து விட்டு வந்த தம்பி 
படுக்கையில் வாந்தி எடுத்தாய் இதுவரை 
குற்றச்சாட்டு ஒன்றும் இல்லை
அக்காள்களும் , மனைவியும் 
பிணைந்தே இருக்கிறார்கள்  மரமும் நிழலுமாய்  .
சத்தம் வீட்டில்  சத்தம் இல்லாமலேயே இருக்கும் 
என்றாவது கத்தும் அடுக்களை பரணி  தவறி 
 விழுந்த பித்தளை  பாத்திரம்,
மகளின் அழுகை சத்தமும் வாசலிலேயே  
படுத்து கிடக்கும் ..வெளி செல்ல மனதில்லாமல்
மாமியார் கொடுமை,நாத்தனார் சித்ரவதை
பழிவாங்கும் மாமா, ஏமாற்றப்பட்ட தங்கை 
சொத்து சண்டை ,காவல் நிலைய விசாரணை 
 நீதிமன்ற அலைச்சல் ,வீண் சவால் ..
இவையொன்றும் இல்லை எங்கள் வீட்டு அகராதியில் தினந்தோறும் வந்து அரங்கேற்றி போகிறார்கள் ..
தொலைக்காட்சியில் நெடுந்தொடர் பாத்திரங்கள்..