Followers

Friday, July 25, 2008

தாய்

என்னை உலகிற்கும்
உலகில் பல எனக்கும்...
அறிமுகம் செய்தவள்

தாய்ப்பாலில் சுவை
தாலாட்டில் இசை
மார்பணைப்பில் சுகம்
செல்ல அடியில் வலி
கொஞ்சலில் மொழி -பால்சோறு
கெஞ்சலில் வான் நிலா..
இன்னும்..

என் சினுங்கல் அவளுக்கு சிம்போனி
கிறுக்கல் ஓவியம்
தள்ளாட்டம் நாட்டியம்
எச்சில் சோறு தேன்
பிதற்றல் இலக்கியம.

அஷனமே கொல்லும்
நஞ்சும் அவள் கைப்பட
மாறிவிடும் அமிழ்தம் ...

ஈடு இனை இல்லாத பஞ்சனை
அவள் மடியனை
ஒரு நொடி அவள் மடி
உலககவலை மறக்கசெய்யும் .....

பட்டு
கம்பளமும் தகுதி இழக்கும்
அவள் வியர்வை வாசம் படிந்த
சேலைக்கு முன்..

தரணியில் உருவகம் இல்லதவள்
உலகிற்கு உருவகம் ஆனவள் ....

1 comment:

silvanus said...

maapla... pinni irukka da... antha first one really amazing... antha ninaivugal unaku mattum illada.. en pazhaya gnabagangala kuda kan munnaadi kondu vanthu niruthiruchu... thanks for this sort of kavithai thoguppagal... keep add something.... god has put wonderful talent in u da... achieve something for god through this