Followers

Friday, February 22, 2019

Mrs. விஸ்வநாதன் ரிச்சர்ட்ஸ் (1983-1920)


கடைசியாக வாசித்த நாவல் தந்த வறட்சியில் நாவல் வாசிப்பையே ஒதுக்கி வைத்தாயிற்று.அப்படியே வாசிப்பையும் கொஞ்சம். எப்போதாவது வசித்தாலும் அரசியல், வரலாறு பற்றிய புத்தகங்களே.
ஆனால் உலக வரலாற்றில் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கும் போதே புகைப்படங்களை குறியீடுகளாகவும். அதையும் தாண்டி புத்தகத்திற்கு முகநூலில் ட்ரைலர் வெளியிட்டு அதில் ராஜாவின் இசையை போட்டு நம்மள புடிச்சு இழுக்க இந்த புத்தகத்தை வாங்கியாச்சு. 
புத்தகத்தை பார்த்தவுடன் ஒரே பயம் ஆத்தாடி எத்த தண்டி புத்தகம் என.. பயந்தே போனேன்.

புத்தகத்தின் பெயரும் அதிலிருந்த பின்நோக்கிய வருட குறிப்பும் Karthikeyan Maddy இன் முகப்பு ஓவியமும் ஏதோ மர்மம் வைத்து 
ஆர்வத்தை கூட்ட படிக்க ஆரம்பிச்சா சென்னையிலிருந்து வேலூர் போகும் வால்வோ ஏ சி பஸ் போல வேகம்..
வேலூரில் நடக்கும் ஒரு காதல் கதை தான் இந்த நாவல். வேலூரில் புதியதாக உருவாகும் ஒரு நண்பர்கள் குழு அதில் ஒரு பெண்.. அவளுக்கும் கதை நாயகனுக்கும் காதல்.. அவளுக்கும் அவன் மீது காதல். ஆனால் இந்த காதலை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளாமல் இருக்கிறார்கள் பரஸ்பரம் நட்புடன்.. இணைந்தார்களா இல்லையா என அறிய புத்தகம் வாங்கி படிப்பது நல்லது. பங்கஜம் கெளுத்தி, 
கிச்சா, உமா, ரகு,குரு, விஜய், எலி மாம்ஸ், இன்னும் சிலர் அதன் பிறகு முக்கியமாக பாலாற்றையும் இளையராஜாவையும் கதை மாந்தர்களாக்கொண்டு சில பல நிகழ்வுகளாகவே நாவல் நகர்கிறது. 1983ம் 1920ம் தனித்தனி அத்தியாயங்களில் பயணித்து ஒரு சங்கிலியால் இணைகின்றன. 
இது கற்பனை கதைதான் என எண்ணிக்கொண்டே படித்தால் பாலாறு, வெயிலூர், வேலூர் புரட்சி, ஈழப்போராட்டம், இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம், கம்மவான் பேட்டை, பொங்கலுக்கு தாய்வீடு, பாயும்புலி என இரண்டு ரஜினி படங்கள் ஒரே நாள் வெளிவந்தது போன்ற வரலாற்று தகவல்கள் !!!! ஆச்சர்யமூட்டுகின்றன.. 
தேவையான இடங்களில் மட்டும் மிக குறைந்த வர்ணனைகள்.. குறைந்த சூழ்நிலை விவரிப்புகள் கதையின் வேகத்திற்கு பிரதான காரணம். 
குறிப்பாக தனிமையில் ஒரு பெண்னும் ஆணும்.. பெண் நனைந்து விடுகிறாள். அந்த இடத்தில் கூட வர்ணனைகள் தொட்டும் தொடாமல் செல்கிறதுனா பாருங்களேன்.😀
வேலூர்காரங்களும்.. என்னை போன்ற ராஜா வெறியர்களும் தவற விடக்கூடாத நாவல். 
பாட்டு கேட்டுக்குக்கொண்டே புத்தகம் படிப்பவர்கள்.. இளையராஜாவைக் கேட்டுக்கொண்டே இந்நாவலை வாசிக்க பரிசீலிக்கிறேன்..செம்ம feel. 
ஒரு அத்தியாயத்தில் இளைய நிலா பொழிகிறது பாடலை பற்றிய உரையாடல் வந்து கொண்டிருக்கும் போது எனது play லிஸ்டில் இளையநிலா பாடல் வந்தது.. ஏதோ பிணைப்பு போல.
அங்கங்கே வந்து கொண்டே இருக்கும் counter கடிகள் கொஞ்சம் அலுப்பு தான்.. சரி கதை நடக்கும் கால கட்டத்தில் இதுமாதிரியான கடிகள் பிரபலமோ... என்னவோ 
சட்டென்று குறையென படுவது அடிக்கடி வரும் ஆங்கில உரையாடல்கள்.. கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். வாத்தியார்களே 😀

வாழ்த்துகள்.. 💙