Followers

Saturday, September 13, 2008

கனாக்காலம் ....

வருமா ? மீண்டும்
அந்த நாள், நாழிகை..

தாயிடம் அடிவாங்கி
அழுது கொண்டு
அகரம் படித்த நாள் ..

அப்பா கொடுத்த
ஒரு ரூபாய் நோட்டு
ஒரு வாரம் சட்டைபையில்
வைத்திருந்த நாள்..

தீபாவளி புதுசட்டையுடன்
ஊர் முழுதும் ஒய்யாரம்
காட்டி வந்த நாள்..

பொய் துப்பாக்கியில்
நண்பன் சுட
சடலமென சரிந்த நாள் ..

மணல் வீட்டுக்கு
மாவிலை தோரணம்
திறப்பு விழா கண்ட நாள் ..

தங்கையிடம் சண்டையிட்டு
காயா ? பழமா ?
கேட்ட நாள்..

ஐம்பது காசு
வாடகை சைக்கிளில்
வித்தைகள் பல காட்டிய நாள் ..

வயிற்று வலியும் ,
தலை வலியும் ,
சேர்ந்து வரும்
திங்கள் கிழமை நாள்..

ஆண்டு தேர்வில்
கடைத்தேர்வை
எதிர்பார்த்த நாள் ...

போலீஸ் எங்க மாமா
என்ற நண்பன் ,
இன்ஸ்பெக்டர் எங்க மாமா
என பொய்யுரைத்த நாள் ..

முன் இருக்கை
கமலா சட்டையில் மைதெளித்து
திரும்பிய அவளை
அப்பாவியை பார்த்த நாள்..

இன்று....
தொலைந்த இன்பமாய்..
கலைந்த காலம்..........
இனிமையாய்...
நினைவலையில்........மட்டும் !!!