உலக வரைபடத்தில் சிதறி கிடப்பது
மட்டும் என் பெருமை
குடல் சரிந்தும் , உடல் பிளந்தும் ,
முளை கிழிந்தும், யோனி விரிந்தும்
உறவுகள் பிணம் குப்பையாய் வீதியில்.
போருக்கு பொருள் விளக்கமும்
வெடிகுண்டின் தன்மையும் அறியாத
மழலையர் பள்ளியில் கொத்து குண்டு வீச்சு .
முள் வேலிக்குள் நீரின்றி வளர்க்கப்படும் மனித செடிகள்
சகியாத காணொளிகள் ஒருபுறமிருக்க …
பேயாட பிசாசாட...சூப்பர் சிங்கர் ஓலமும் ,
என் விருப்பமென ..
போரில் மடிந்த உயிரின் எண்ணிக்கை எத்தனை
இலக்கம்?? , - கிடக்கட்டும்
என் சம்பளம் ஆண்டுக்கு எத்தனை இலக்கம்
என்பது பெருங் கவலையேன.. வாழும் தமிழன் ,,
.உடல் சமைத்து இன உணர்வு பரிமாறிய
முத்துகுமரன் மரணம் செவிப்பறை
கிழிய அறைந்தாலும்..
மது... மங்கை . மயக்கமே கொள்கையென
இருந்த தமிழன் ...
நாய் சிங்களன் தமிழ் இரத்தம் குடிக்க
குவளை எடுத்து கொடுக்கிறான் இந்தியன் ஒருவன்
உணர்வின்றி .. ஏட்டு சுரைக்காய் கவி எழுதுகிறான்
தமிழ் , தமிழரல் வளமை சேர்த்த நம் ஆண்டவன் ..
ஆண்டவனின் உலக சாதனை உண்ணா விரதம் பார்த்து
மெச்சின .. தமிழன் ..
கானல் உலகில் ..கன்னியை கட்டிபிடிக்க
அட்டை கத்தி ,சண்டை போட்டவனெல்லாம் தலைவனாக
இழந்த உரிமை மீட்க ஆயுதம் கண்ட தலைவனை தீவிரவாதி
என்னும் சுய அறிவிலி தமிழன் ..
சாதிக்கும்,மதத்துக்கும்,நடிகனுக்கும்,அலையென கூடினாலும்
இன மீட்பிற்கு ஒன்றாய் கூடாமல் அமைதி காத்த தமிழன்
இனம் அழிவதை கண் முன்னால் கண்டும்
உறவுக்கு தோளும் உரிமைக்கு குரலும் தருவேன்
வெற்று பேச்சிலே காலம் கழித்த தமிழன்
போர் குற்றமல்ல …. மக்களுக்காக போராடாமல்
பெரூங்குற்றம் பண்ணிய தமிழன் நான் தான்
முதல் குற்றவாளி !!!!
குறிப்பு :
இந்த புலம்பல் கடந்த 2009ம் ஆண்டு
எழுதியது..இன்றும் எனக்கு இந்த மனக்கவலை உண்டு ஈழ தமிழர்களுக்காக வீதியில் இறங்கி
போராடவில்லை என்று...இப்பொழுது தமிழ் நாட்டில் நடக்கும் பல்வேறு மாணவர்
போராட்டங்களை பார்க்கும் போது நான் படிக்கின்ற காலங்களில் எத்தனையோ கொடுமைகள் நடந்தும் கண்டும்
காணமல் ,போராட்ட குணமேஇல்லாமல் இருந்ததை எண்ணி மிகவும் கூனி குறுகி
வெட்கபடுகிறேன். இப்போதைய இளம்
தலைமுறையை பார்த்து மிக பெருமை அடைகிறேன்..வெல்லட்டும் என் தம்பி, தங்கைமார்களின் போராட்டம் .