Followers

Sunday, September 27, 2015

பரவும் விஷம்

ஒரு விலங்கை கழுத்தறுப்பது  போல  ஒரு இளஞனை கொலை செய்த மிருகம் ஒன்று  அதே வழக்கை கையாண்ட மற்றும் தானே தற்கொலை  செய்து கொண்டார் என கூறப்படும்  மறைந்த காவல் துறை உயர் அதிகாரியுடன் பேசிய உரையாடலை  கேட்க நேர்ந்தது .தான் கொலை செய்துவிட்டோம்  என்ற குற்ற உணர்ச்சி  துளியும் இல்லாமல்  மிக சகஜமாக  பேசிகொண்டிருக்கும் மிருகத்திடம் யார் பொய் சொல்வார்  அவன் கழுத்தறுத்து  கொலை செய்தது கோகுல்ராஜ் எனும் இளைஞனின் உயிரை மட்டும் அல்ல  ஒரு எளிய சமுக குடும்பத்தின் அத்தனைக் கனவுகளையும் என்று . ஒரு கொடூரன், படும்  பாதக செயலை செய்துவிட்டு  தமிழ்நாடு முழுவதும் உலா வர முடிகிறதென்றால் ...நவீன காலத்தின்  அத்துனை தொழில் நுட்பங்களுடன் அவனால்  தன்  நிலையை வெளிபடுதிகொள்ள முடியுமென்றால் , காவல் துறைக்கே   சவால் முடிகிறதென்றால் ..அவனுக்கு எவ்வாறானபின்புலம் இருக்கும் ??? இதைவெறும் அதிகாரிகளின்  ஒத்துழைப்பு என்று  சுருக்கி விட  முடியாது .அவனது சாதியின் பலம் அவ்வளவு ... அவனைக் காட்டிகொடுக்காத ஒவொருவரும்( அவன் சொல்லும் ஹோட்டல் காசாளர் உட்பட ) இந்த கொலைக்கு உடன் படுகிறார்கள் என்பதே உண்மை. தங்கள் மீது விழுந்த கோகுல் ராஜ் என்ற இளைஞனின் ரத்த துளியை எதைக்கொண்டு துடைப்பார்கள் ????.

சிலநாட்களுக்கு முன்பாக ஒரு தெலுங்கு நண்பன் என்னிடம் உங்க  தமிழ் ஆளுங்கள தமிழ் நாட்டவிட்டு  வெளிய போனா ஒருத்தனும் மதிக்க மாட்டாங்கனு சொன்னான்,நான் அவனிடம்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு  உங்களுக்கெல்லாம் எங்க மேல பொறமை அது தான் இப்படி பேசுறீங்க ,தமிழன் நாகரீகத்திலும் ,ஆங்கில உச்சரிப்பிலும், வேலையிலும் மற்ற மாநிலத்தவர்களை ஒரு படி மேல இருப்பான் சொல்லி சண்டையிட்டேன் .. அந்த வாக்குவாதத்தின் போது  அவன் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் யோசிக்க வைத்தது " தன் ஊரை விட்டு வெளியே ஒரு கன்னடாக் காரன் இன்னொரு கன்னடகாரனை கன்னடனா மட்டும் பாப்பான் ..ஒரு தெலுங்கன்.. தெலுங்கனை தெலுங்கனகவும் ,மலையாளி மலையாளியாகவும் பாப்பான் ஆனா நீங்க மட்டும் தன அவன் எந்த சாதின்னு பாப்பீங்கனு  சொன்னான் - உண்மை தானே ??? - சாதி தான் சமூகமென்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்ற அண்ணலின் வார்த்தை அடிக்கடி  காதில் ஒலிக்கிறது ....தற்போது தமிழ் நாட்டில் சாதி தான் சமூகமென்று ஆகிகொண்டே வந்து விஷம் பரவ ஆரம்பித்திருக்கிறது ..நாம் அதில் மரணிக்கும் நாள் வெகு தூரம் இல்லை .

Saturday, September 5, 2015

வகுப்பறை கடவுள்.



கைமாறு எதிர்பாரா கடவுள்
நிற்கும் கருவறை -வகுப்பறை ..
பொதுநலம் என்பதன்
உதாரணச்சொல் - ஆசிரியர்
கற்பாறை ,மணல்,முட்புதர்,
நல் நிலம்  எதுவெனினும்
பாரபட்சமின்றி மழை தரும் வானம்
எதிர்காலம்  அதை எப்படி
எதிர்க்கலாம் என்பதை சொல்லி தந்த  சூத்திரம்
கல்வி  மந்திரம் ஓதி
வருங்காலம் காட்டிய மாயக்கண்ணாடி
எங்களை  தூக்கி விட்ட கயிறு ஆசான் ..
நீங்களில்லையெனில் எம் வாழ்க்கை உயர்ந்திருக்காது அரை சாண் ...

Saturday, June 13, 2015

காக்கா முட்டை - நல்ல சுவை


பல வருடங்களுக்கு முன்பு தொலைகாட்சி விளம்பரங்களில் விலை உயர்ந்த உணவு பண்டங்களை  மிகைபடுத்தி  காட்டும் போது  அதை  பார்க்கின்ற ஏழை  குழந்தைகள் ஏங்கி போகின்றனர் . அதை வாங்கி  தின்ன முடியாத அவர்கள் மிகுந்த   மன பாதிப்புக்கு  உள்ளாவார்கள் எனவே அந்த  விளம்பரங்களை தடை செய்யவேண்டும்  என நீதிமன்றத்தில்  ஒரு பொது நல வழக்கு  தொடரப்பட்டது . அந்த வழக்கில்  விளம்பரங்களை  தடை செய்யமுடியாது எனவும் அவ்வாறு விளம்பரம்  ஒளிபரப்பும் வேளைகளில் கிழே அதற்கான  பொறுப்பு  துறப்பு  செய்தியை போட வேண்டும் என்று தீர்ப்பு வந்ததாக நினைவு  .அதாவது  இப்போது எல்லா திரைப்படங்களிலும்  பெயர் போடுவதற்கு  முன்னால் போடுகிறார்களே  இத்திரைப்படத்தில்  வரும் காட்சிகள் அணைத்தும்  கற்பனையே  என்பது  போல .
காக்கா  முட்டை - இரு  சிறுவர்கள்  pizza  தின்ன ஆசைப்பட்டு  அதை எப்படி தின்றார்கள் ?? என்பதே கதை ..சற்றே  நீளமான குறும்படம் போல  இருந்தாலும்  சமகாலத்தின் முக்கியமான  பிரச்சனைகளை  அழகாக தொட்டு செல்கிறார் இயக்குனர் . விளிம்பு நிலை  மனிதர்களின் ஆசைகள் , பள்ளி இடை நின்ற சிறுவர்களின் வாழ்க்கை , மேற்கத்திய உணவின் மீதான மோகம் ,  செய்தி ஊடகங்களின்  வன்மம். அரசியல் துரோகம் ,மற்றும் சென்னையின் அழுக்கை  அப்படியே அழகாய்  பதிவு செய்திருகிறார்கள்..
விருதுக்காக  எடுக்கப்பட்ட  படம் போல் தெரிந்தாலும்  வசனம், எடிட்டிங் , பின்னணி இசை  ..LOCATION  அனைத்தும்  நல்ல  சினிமாவுக்கானது
கெட்டு  போனா  நூலு  நூலா  தண்டா  வரும் ..என்ற  வசனம் Pizza  பிரியர்களாலயே கை தட்டி ரசிக்க கூடியது .
படத்தில் எல்லாரும் கை தேர்ந்த நடிகர்கள் போல நடித்திருப்பது மிகபெரிய பலம் .. அந்த நாய்க்குட்டி உட்பட..
இன்னும் நிறைய இருக்கு .. வெண்திரையில்  குடும்பத்தோடு ருசித்து  மகிழுங்கள்  ..
இயக்குனர் மணிகண்டன் ,ஜி வி பிரகாஷ் , தனுஷ்  மற்றும்  வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு : PIzza பிடிக்காதுன்னு  சொன்னா  என்ன கிண்டல்  பண்ற  அலுவலக நண்பர்கள் அனைவருக்கும்  இப்படத்தில்  வரும் கடைசி  காட்சியில் சின்ன காக்கா  முட்டயோட   Face  expression   தான்  பதில் ....