Followers

Wednesday, July 27, 2016

ஓர் வரலாற்றின் முதல் வரி



பாலையில் ஊறிய

கிளை நதியொன்று ,

பெருங்கடல் கலக்கிறது.

இருள் சூழ் கூட்டத்தின்

இரண்டாம் சுடரென

பேரொளியின் ஒருபுள்ளி

பெருவெளிச்சத்தின்

சுடர் விடுகிறது .

கரும் புலியொன்று

அறிவாயுதம் பழக

கல்விக்களம் நுழைகிறது.

வாயாடல் உலகமொன்று

வகுப்பறைக்குள் சுழல

தன் இயக்கம் துவங்குகிறது

எல்லாருக்குமான நீல மேகம்

வறன்டவர் நிலங்களில்

வசந்த மழை தர விரைகிறது .

இல்லாமை புத்தகத்தை

முழுதாய் படித்தவனின்

கவிதையொன்று

எளியவர் வாழ்வகராதியில்.

இல்லாமை எனும் சொல் தேடி

அழிக்கப் புறப்படுகிறது .

இப்படியாக ஒரு வரலாற்றின் முதல் வரி எழுதப்படுகிறது

"மகள் பள்ளிக்கு செல்கிறாள் "







‪#‎மகிழ்ச்சி‬


தமிழ் சினிமா எப்படியான நீரோட்டத்தில் பயணிக்கிறது என்பதை அறியாமல் இன்னும் அதே பாணி கதைகளில் ரஜினி நடித்துக்கொண்டிருக்கிறாரே என லிங்கா படத்தை பார்த்த பிறகு நான் வருந்தியதுன்டு ஆனால் ...ரஜினி மாறிவிட்டார் !!!!!கபாலியில்!! மாற்றியவர் இயக்குனர் பா.ரஞ்சித் . சில ரஜினி ரசிகர்களும் மற்றும் சில குறைகூறிகளும் இன்னும் கே.எஸ். ரவிகுமார் ,பி. வாசு ரசிக வகையறாக்களாக இருப்பதே இப்படத்திற்கு வரும் எதிர்மறை விமரிசனங்கள்.
இயக்குனர் ரஞ்சித் "கபாலி"என்ற பெயரை படத்திற்கு சூட்டியது ,அதை ரஜினி தன் படத்தலைப்பாக ஏற்றுக்கொண்டதே...இது ரஜினி படம் இல்லை என்பதற்கான முதல் ஆதாரம்.பழைய சினிமாக்களின் தயவின்படி இதற்கு முன தமிழ்நாட்டில் யாருக்கும் கபாலி எனகிற பெயரைப்பற்றிய ஒரு நல்ல அபிமானம் இருக்க வாய்ப்பில்லை .
ஒரு கேங்க்ஸ்டருக்கும் தனிப்பட்ட உறவு சார்ந்த உணர்வுகள் இருக்கும் அப்படியான உறவுகளைத்தேடிக்கொண்டே எதிர் வரும் பழைய ,புதிய எதிரிகளை அவன் பழி வாங்குவதே இப்படம் .படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் டீசரில் காட்டிய கபாலி இல்லை என்பது புலனாகிறது ..இதில் ரஞ்சித்தும் அவர் சகாக்களும் ரஜினி என்ற உச்சத்துடன இனைந்து் மிக அநாயசமாக ஒர் உணர்வு பயணத்தை வழிநடத்தி செல்கிறார்கள். ரஜினியும்அப்படியே அவர்களுக்கு ஒத்துழைத்திருக்கிறார்.இவர்களுக்கு பக்கத் துனையாக சந்தோஷ் நாராயணனின் இசை. மாய நதியொன்று படம் முழுவதும் ஓடுகிறது,அதின் ஓட்டம் குறைகையில் நெருப்புடா என பற்றி எரிகிறது .
,ஆறிலிருந்து அறுபது வரை,முள்ளும்..மலரும்.,தில்லுமுல்லு,ஜானி ,தளபதி மற்றும் எந்திரன் போன்ற சில படங்களைத்தவிர மற்ற பல படங்களில் ரஜினி என்ற மகா நடிகனை மசாலாத்தடவியே நமக்கு பரிமாறி விட்டார்கள் .இப்படத்தில் உறவுகளின் பிரிவையும் அவர்கள் திரும்ப கிடைக்கும் போது அவர் வெளிக்காட்டும் நடிப்பிலும் ரஜினியின் மசாலா முழுவதும் கழுவப்பட்டிருக்கிறது ... ஆவ்சம் ரஜினி சார் .💟💟💟💟💟💟
அறிமுக காட்சி மூலமாக அவரின் தற்போதைய நிலையை அதாவது அவரின் உறுதியை சொல்லுவது,போதைக்கு அடிமையானோர் மற்றும் அத்தொழிலில் ஈடுபடுவோர்...ஜானி ,ரித்விகா ,மற்றும் பள்ளி மாணவர்களென எல்லாருடைய குணநலன்களை காட்சியமைப்பில் அப்படியே வெளிப்படுத்தும் விதம் அங்காங்கே தெறிக்கும் வசனங்கள் என .. ஆஹா ரஞ்சித். வெல் டன் .குறிப்பாக அனைவரின் உடை ..மற்றும் அனிகலன்கள்.இடத்தேர்வு கலை என படக்குழுவினரின் உழைப்பு வண்ணங்களாய் காட்சிகளில் விரிகிறது . படத்தின் முதல் பாடலுக்கு முன் கார் பயணத்தில் வரும் டீட்டெயிலீங் காட்சிகள்,சென்னை ரவுடிகளின் உதவிகள் மற்றும் ,மனைவியை தேடும் நீண்ட காட்சி எனும் விதமாக எடிட்டிங்கில் குறை என சொல்ல தோன்றுகிறது. இவைகளை குறுக்கி ஆக்சன் காட்சிகளை நீட்டியிருந்தால் குறை சொல்ல வாய்பில்லாமல் தவித்திருப்பார்கள் ரஜினி ,ரஞ்சித் Haters.. .மற்றபடி ரஜினி தன்னுடைய எல்லா மாயாஜாலங்களை தவிர்த்து இயக்குனரின ஆட்டுவித்தலுக்கு தன்னை உட்படுத்தி தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவரின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க படம் இந்த "கபாலி"
மிக முக்கியமாக "மகிழ்ச்சி"என்ற ஒரு தமிழ் வார்த்தையை எல்லையில்லா பிரபலமாக்கிய காரணத்திற்காகவே இப்படத்தை நெகிழ்ச்சியுடன் குடும்ப சகிதமாக ரசிக்கலாம் .