பல வருடங்களுக்கு முன்பு தொலைகாட்சி விளம்பரங்களில் விலை உயர்ந்த உணவு பண்டங்களை மிகைபடுத்தி காட்டும் போது அதை பார்க்கின்ற ஏழை குழந்தைகள் ஏங்கி போகின்றனர் . அதை வாங்கி தின்ன முடியாத அவர்கள் மிகுந்த மன பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவே அந்த விளம்பரங்களை தடை செய்யவேண்டும் என நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது . அந்த வழக்கில் விளம்பரங்களை தடை செய்யமுடியாது எனவும் அவ்வாறு விளம்பரம் ஒளிபரப்பும் வேளைகளில் கிழே அதற்கான பொறுப்பு துறப்பு செய்தியை போட வேண்டும் என்று தீர்ப்பு வந்ததாக நினைவு .அதாவது இப்போது எல்லா திரைப்படங்களிலும் பெயர் போடுவதற்கு முன்னால் போடுகிறார்களே இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் அணைத்தும் கற்பனையே என்பது போல .
காக்கா முட்டை - இரு சிறுவர்கள் pizza தின்ன ஆசைப்பட்டு அதை எப்படி தின்றார்கள் ?? என்பதே கதை ..சற்றே நீளமான குறும்படம் போல இருந்தாலும் சமகாலத்தின் முக்கியமான பிரச்சனைகளை அழகாக தொட்டு செல்கிறார் இயக்குனர் . விளிம்பு நிலை மனிதர்களின் ஆசைகள் , பள்ளி இடை நின்ற சிறுவர்களின் வாழ்க்கை , மேற்கத்திய உணவின் மீதான மோகம் , செய்தி ஊடகங்களின் வன்மம். அரசியல் துரோகம் ,மற்றும் சென்னையின் அழுக்கை அப்படியே அழகாய் பதிவு செய்திருகிறார்கள்..
விருதுக்காக எடுக்கப்பட்ட படம் போல் தெரிந்தாலும் வசனம், எடிட்டிங் , பின்னணி இசை ..LOCATION அனைத்தும் நல்ல சினிமாவுக்கானது
கெட்டு போனா நூலு நூலா தண்டா வரும் ..என்ற வசனம் Pizza பிரியர்களாலயே கை தட்டி ரசிக்க கூடியது .
படத்தில் எல்லாரும் கை தேர்ந்த நடிகர்கள் போல நடித்திருப்பது மிகபெரிய பலம் .. அந்த நாய்க்குட்டி உட்பட..
இன்னும் நிறைய இருக்கு .. வெண்திரையில் குடும்பத்தோடு ருசித்து மகிழுங்கள் ..
இயக்குனர் மணிகண்டன் ,ஜி வி பிரகாஷ் , தனுஷ் மற்றும் வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு : PIzza பிடிக்காதுன்னு சொன்னா என்ன கிண்டல் பண்ற அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் இப்படத்தில் வரும் கடைசி காட்சியில் சின்ன காக்கா முட்டயோட Face expression தான் பதில் ....