Followers

Sunday, September 27, 2015

பரவும் விஷம்

ஒரு விலங்கை கழுத்தறுப்பது  போல  ஒரு இளஞனை கொலை செய்த மிருகம் ஒன்று  அதே வழக்கை கையாண்ட மற்றும் தானே தற்கொலை  செய்து கொண்டார் என கூறப்படும்  மறைந்த காவல் துறை உயர் அதிகாரியுடன் பேசிய உரையாடலை  கேட்க நேர்ந்தது .தான் கொலை செய்துவிட்டோம்  என்ற குற்ற உணர்ச்சி  துளியும் இல்லாமல்  மிக சகஜமாக  பேசிகொண்டிருக்கும் மிருகத்திடம் யார் பொய் சொல்வார்  அவன் கழுத்தறுத்து  கொலை செய்தது கோகுல்ராஜ் எனும் இளைஞனின் உயிரை மட்டும் அல்ல  ஒரு எளிய சமுக குடும்பத்தின் அத்தனைக் கனவுகளையும் என்று . ஒரு கொடூரன், படும்  பாதக செயலை செய்துவிட்டு  தமிழ்நாடு முழுவதும் உலா வர முடிகிறதென்றால் ...நவீன காலத்தின்  அத்துனை தொழில் நுட்பங்களுடன் அவனால்  தன்  நிலையை வெளிபடுதிகொள்ள முடியுமென்றால் , காவல் துறைக்கே   சவால் முடிகிறதென்றால் ..அவனுக்கு எவ்வாறானபின்புலம் இருக்கும் ??? இதைவெறும் அதிகாரிகளின்  ஒத்துழைப்பு என்று  சுருக்கி விட  முடியாது .அவனது சாதியின் பலம் அவ்வளவு ... அவனைக் காட்டிகொடுக்காத ஒவொருவரும்( அவன் சொல்லும் ஹோட்டல் காசாளர் உட்பட ) இந்த கொலைக்கு உடன் படுகிறார்கள் என்பதே உண்மை. தங்கள் மீது விழுந்த கோகுல் ராஜ் என்ற இளைஞனின் ரத்த துளியை எதைக்கொண்டு துடைப்பார்கள் ????.

சிலநாட்களுக்கு முன்பாக ஒரு தெலுங்கு நண்பன் என்னிடம் உங்க  தமிழ் ஆளுங்கள தமிழ் நாட்டவிட்டு  வெளிய போனா ஒருத்தனும் மதிக்க மாட்டாங்கனு சொன்னான்,நான் அவனிடம்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு  உங்களுக்கெல்லாம் எங்க மேல பொறமை அது தான் இப்படி பேசுறீங்க ,தமிழன் நாகரீகத்திலும் ,ஆங்கில உச்சரிப்பிலும், வேலையிலும் மற்ற மாநிலத்தவர்களை ஒரு படி மேல இருப்பான் சொல்லி சண்டையிட்டேன் .. அந்த வாக்குவாதத்தின் போது  அவன் சொன்ன ஒரு வார்த்தை என்னை மிகவும் யோசிக்க வைத்தது " தன் ஊரை விட்டு வெளியே ஒரு கன்னடாக் காரன் இன்னொரு கன்னடகாரனை கன்னடனா மட்டும் பாப்பான் ..ஒரு தெலுங்கன்.. தெலுங்கனை தெலுங்கனகவும் ,மலையாளி மலையாளியாகவும் பாப்பான் ஆனா நீங்க மட்டும் தன அவன் எந்த சாதின்னு பாப்பீங்கனு  சொன்னான் - உண்மை தானே ??? - சாதி தான் சமூகமென்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்ற அண்ணலின் வார்த்தை அடிக்கடி  காதில் ஒலிக்கிறது ....தற்போது தமிழ் நாட்டில் சாதி தான் சமூகமென்று ஆகிகொண்டே வந்து விஷம் பரவ ஆரம்பித்திருக்கிறது ..நாம் அதில் மரணிக்கும் நாள் வெகு தூரம் இல்லை .

No comments: