Followers

Saturday, September 5, 2015

வகுப்பறை கடவுள்.



கைமாறு எதிர்பாரா கடவுள்
நிற்கும் கருவறை -வகுப்பறை ..
பொதுநலம் என்பதன்
உதாரணச்சொல் - ஆசிரியர்
கற்பாறை ,மணல்,முட்புதர்,
நல் நிலம்  எதுவெனினும்
பாரபட்சமின்றி மழை தரும் வானம்
எதிர்காலம்  அதை எப்படி
எதிர்க்கலாம் என்பதை சொல்லி தந்த  சூத்திரம்
கல்வி  மந்திரம் ஓதி
வருங்காலம் காட்டிய மாயக்கண்ணாடி
எங்களை  தூக்கி விட்ட கயிறு ஆசான் ..
நீங்களில்லையெனில் எம் வாழ்க்கை உயர்ந்திருக்காது அரை சாண் ...

No comments: