பாலையில் ஊறிய
கிளை நதியொன்று ,
பெருங்கடல் கலக்கிறது.
இருள் சூழ் கூட்டத்தின்
இரண்டாம் சுடரென
பேரொளியின் ஒருபுள்ளி
பெருவெளிச்சத்தின்
சுடர் விடுகிறது .
கரும் புலியொன்று
அறிவாயுதம் பழக
கல்விக்களம் நுழைகிறது.
வாயாடல் உலகமொன்று
வகுப்பறைக்குள் சுழல
தன் இயக்கம் துவங்குகிறது
எல்லாருக்குமான நீல மேகம்
வறன்டவர் நிலங்களில்
வசந்த மழை தர விரைகிறது .
இல்லாமை புத்தகத்தை
முழுதாய் படித்தவனின்
கவிதையொன்று
எளியவர் வாழ்வகராதியில்.
இல்லாமை எனும் சொல் தேடி
அழிக்கப் புறப்படுகிறது .
இப்படியாக ஒரு வரலாற்றின் முதல் வரி எழுதப்படுகிறது
"மகள் பள்ளிக்கு செல்கிறாள் "
2 comments:
மகள் பள்ளிக்கு செல்ல நல்ல ஒரு புலம்பல்...
அதென்ன பாலையில் ஊறிய நதி?
இரண்டாம் சுடர் விளக்கம் வேண்டுமே!
சிறப்பான முகப்பு... ஓர் வரலாற்றின் முதல் வரி...
"இல்லாமை புத்தகத்தை
முழுதாய் படித்தவனின்
கவிதையொன்று..."
இது மனதை வருடுகிறது யோவானி !
thank you father...
Post a Comment